கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையில் திறக்கும் இரண்டு புதிய விற்பனை நிலையங்கள்!

  • கூடுவாஞ்சேரி, புரசைவாக்கத்தில் நடிகர் பிரபு இரண்டு புதிய விற்பனை நிலையங்களைத் திறந்து வைக்கிறார்.
  • உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவம்.

சென்னை, 27 ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரியின் ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாக்கத்தின் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் விற்பனை நிலையமான கேன்டிரி [Candere]-யும் இந்த விற்பனை நிலையங்களுடன் இணைந்து இயங்கும். கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரத் தூதரும் நடிகருமான பிரபு கணேசன் இந்தப் புதிய விற்பனை நிலையங்களைத் திறந்து வைக்கவுள்ளார். வாடிக்கையாளருக்கான சேவைகளுடன் கூடிய நிறைவான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளது. இந்த திறப்பு விழாக்கள் வரும் ஜனவரி 28-ம் நாள் காலை 11 மணிக்கு நடைபெறும்.

காதலர் தினத்தையொட்டி அதைக் கொண்டாடும் வகையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் இத்திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளையும் அறிவிக்கிறது. ஜனவரி 25 முதல் பிப்ரவரி 9 வரை செய்கூலியில் 50% தள்ளுபடி வழங்கவுள்ளது. இரண்டு புதிய விற்பனை நிலையங்களிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கும்போது அதிபட்ச பலன்களைப் பெறலாம். தங்கத்துக்கு சந்தையில் எவ்வளவு விலை குறைந்தபட்சமாக உள்ளதோ அந்த விலையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் அனைத்துக் கடைகளிலும் நகைகள் கிடைக்கும். இந்த சலுகை குறிப்பிட்ட காலமே.

கல்யாண் ஜூவல்லர்ஸின் செயல் இயக்குனர் திரு. ரமேஷ் கல்யாணராமன் [Mr. Ramesh Kalyanaraman, Executive Director of Kalyan Jewellers] பேசும்போது, “ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களின் நகை ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தி முழுமையான ஷாப்பிங் சூழலை உருவாக்குவதில் பெரும் முயற்சிகளை எடுத்து மகத்தான மைல்கற்களை எட்டியுள்ளோம். கல்யாண் ஜூவல்லர்ஸ் பிராண்டுக்கு தமிழ்நாடு பிராந்தியம் முக்கியமானது. பல ஆண்டுகளாக தமிழ்நாடு பிராந்தியத்தில் எங்களது விற்பனை நிலையங்களை விரிவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம். கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில் திறக்கவிருக்கும் புதிய விற்பனை நிலையங்கள் சந்தையில் எங்களது இடத்தை மேலும் பலப்படுத்தும். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் எளிமையாக வந்து வாங்குவதற்கும் ஏற்றவகையில் இந்தப் புதிய விற்பனை நிலையங்கள் இருக்கும்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் சில்லறை நகைகள் அனைத்து BIS ஹால்மார்க் முத்திரை பெற்றவை. அத்துடன் தூய்மைக்கான பல சுற்றுப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டவை. எங்களிடம் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் 4 மட்ட உத்திரவாதச் சான்றிதழ் [4-Level Assurance Certificate] தரப்படுகிறது. மேலும், நகைகளுக்கு ஆயுள்கால பராமரிப்பு இலவசம். அத்துடன் எங்கள் தயாரிப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் தருகிறோம். வாங்கிய நகைகளை எக்ஸேஞ்ச் மற்றும் விற்பனை செய்வதற்கும் வெளிப்படையாக விவரங்கள் சொல்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை கொண்ட வாடிக்கையளர்களுக்கு மிகத் தரமானதை தரும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே கல்யாண் ஜூவல்லர்ஸின் 4 மட்ட உத்தரவாதச் சான்றிதழ் .

கல்யாண் ஜூவல்லர்ஸின் எல்லா புதிய விற்பனை நிலையங்களும் முஹூரத் [Muhurat] என்றழைக்கப்படும் மணப்பெண் நகைகளை இந்தியா முழுவதும் விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளன. இந்த ஆபரணத் தொகுப்புகளில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புகழ்பெற்ற பிராண்டுகளான, தேஜஸ்வி(போல்கி நகைகள்), முத்ரா (புராதன கைவினை நகைகள்), நிமாஹ் (கோயில் நகைகள்), க்ளோ (டான்சிங் டயமண்ட்கள்), ஜியா (டயமண்ட் ஜூவல்லரி), அனோகி(அன்கட் நகைகள்) அபூர்வா (சிறப்புத் தருணங்களுக்கான வைரங்கள்), அந்தரா (திருமண வைரங்கள்), ஹெரா (தினசரி அணியும் வைரங்கள்), ரங்க் (அபூர்வ கற்கள் பதித்த நகைகள்) மற்றும் லீலா (வண்ணக் கற்கள் மற்றும் வைரக் கல் நகைகள்) [Tejasvi (Polki jewellery), Mudhra (Handcrafted Antique Jewellery), Nimah (Temple Jewellery), Glo (Dancing Diamonds), Ziah (Solitaire-like Diamond Jewellery), Anokhi (Uncut Diamonds), Apoorva (Diamonds for Special Occasions), Antara (Wedding Diamonds), Hera (Daily Wear Diamonds), Rang (Precious Stones Jewellery), and the recently launched Lila (Coloured Stones and Diamond Jewellery) ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

கல்யாண் ஜூவல்லர்ஸ் தொடர்பிலான கூடுதல் விவரங்களுக்கு https://www.kalyanjewellers.net

நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

கல்யாண் ஜூவல்லர்ஸ் குறித்து :

கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகள் வரை தனது வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வர்த்தகத்தை நீடித்து நிலைக்கச் செய்து முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. மேலும் ஆபரண சந்தையில் உயரிய தரம், வெளிப்படைத்தன்மை, புதுமை, விலை நிர்ணயம் ஆகியவற்றிக்கு ஒரு புதிய வரையறை உருவாக்கி இருக்கிறது. தனது அடையாளங்களாக கொண்டு விளங்கி வருகிறது. தங்கம், வைரம், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை கொண்டு பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கொண்ட வேலைப்பாடுகளுடன் நகைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சும்ரா 310-க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top