மோடி அரசில் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு நாட்டின் வளங்களில் எப்போதும் முதல் உரிமை உண்டு – அமித்ஷா
சென்னை, செப்டம்பர் 2023: மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் பாஜகவின் ஜன் ஆசிர்வாத் யாத்திரையை செவ்வாய்க் கிழமை தொடக்கிவைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சமூக நீதியை அழித்து சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் எப்போதும் மூழ்கியுள்ளது. அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று தனது ஆட்சிக் காலத்தில் கூறியிருந்தார். 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதும், தனது சித்தாந்தத்தை மாற்றி, தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள்…
