Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விஜயதசமி முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக மதுரவாயல் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சென்னை, 5.10.2022: மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர், மக்கள் சேவகர், கல்வி வள்ளல், அய்யா Dr.A.C.சண்முகம் அவர்களின் பிறந்த நாள், ஆயுத பூஜை நாள் மற்றும் விஜயதசமி நாளை முன்னிட்டு வணிகவியல் துறையின் சார்பாக 23.9.2022, வெள்ளி அன்று மாலை 4 மணி அளவில் மதுரவாயலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் கூறி கொண்டாடினோம்.

இதற்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள், Vice Chancellor Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேலு அவர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் ஆகியோர் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.

இந்த நிகழ்வு வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் 50 மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Top