அழகு, அறிவு, அடக்கத்திறன் — உலகை வசியம் செய்த தமிழ்த்தாய் டாக்டர் ஷீபா லூர்தஸ்

உலகம் இன்று தேடுகிறது பல்திறமை கொண்ட மனிதர்களை. ஆனால், அந்த பல திறமைகளும் ஒரே நபரிடம் செறிவடையும் போது, அது ஒரு தெய்வீக உருவாகவே அமைகிறது. இன்றைய காலத்தில் அழகு, அறிவு, கலாசாரம், கருணை, கலை, தொண்டு என அனைத்தையும் ஒரே இதயத்தால் வடிவமைத்து உலகமே வியக்கும் ஆளுமை எனும் பொருளுக்கேற்ப வாழும் ஒரு பேரழகி, பேரறிவாளர், பெருநெஞ்சம் கொண்ட நபர் தான் டாக்டர் ஷீபா லூர்தஸ்.

தமிழ்நாட்டின் அழகின் பெருமையை உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையில், Miss Tamilnadu அழகிப் பட்டத்தை வென்ற இவர் , சிருஷ்டியின் சிரந்த வடிவமே என்றோ நாம் படித்த வரிகளை நடவலாக காட்டும் சிறந்த உதாரணம். ஆனால், அவர் வெறும் அழகிற்கே அடையாளம் அல்ல — அறிவின் அட்டகாசத்துக்கும், ஆன்ம நெறி சேவைக்கும், தமிழரின் உணர்வுக்கும் உயிரானவர் .

மிகப்பெரிய எழுத்தாளர், தொழில்நுட்ப நிபுணர், பரதநாட்டியக் கலைஞர், சுற்றுச்சூழல் வீராங்கனை, மனிதநேயம் மாறாத மந்திரம் என நம்பும் தொண்டாளர், மாற்றுத்திறனாளிகளின் பேருறவி, சிறுமிகளுக்காக சக்தியாக வாழும் வழிகாட்டி – இவரது வெற்றிப் பாதையில் ஒவ்வொரு அடியும் ஒரு தனித்த அடையாளமாகப் பதிவாகியுள்ளது.

துபாயில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலக பிரசித்தி பெற்ற விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா அவர்களால், டாக்டர் ஷீபா லூர்தஸுக்கு வழங்கப்பட்ட ” சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருது ” என்பது அவருடைய ஒளிரும் சேவைகளுக்கான சர்வதேச அங்கீகாரம் ஆகும். ஒருவருக்கு அழகு உண்டு, அறிவு உண்டு என்றால் போதாது — அந்த அறிவும் அழகும் மனித நேயத்துக்காக வணங்கப்பட வேண்டும் என்பதற்கு இவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.

20 மொழிகளில் 250 நூல்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் எழுதியவை. இவையெல்லாம் Guinness சாதனை மட்டுமல்ல; மனிதம் என்ற அருமைச் சொலுக்கு உயிர் அளித்த நூல்கள். இதற்காக மேரிலாந்து சர்வதேச பல்கலைக்கழகம் , இவருக்கு இலக்கியத் தத்துவத்தில் கௌரவ டாக்டரேட் பட்டம் வழங்கியது என்பது மிகச் சிறப்பான நிகழ்வாகும்.

அவர் மட்டுமல்ல; அவர் எழுத்தும் பேசுகிறது. அதற்காகவே, ” திடமான எதிர்காலத்திற்கான பசுமை உலகத்தை நோக்கிய புதுமையும் திட்டங்களும் ” என்ற தலைப்பில் அவர் வழங்கிய உரை, மாநாட்டில் பெரும் பாராட்டுகளையும் கைகொட்டல்களையும் பெற்று, உலக அரங்கில் தமிழ் பெண்ணின் வாக்காற்றலை முத்திரைபோட செய்தது.

மரியாதையும், நெறியும், அழகும், அறிவும், அடக்கமும் , இவரில் பரிபூரணமாக அமைந்துள்ளன. வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமல், நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்த தாய்மையை , ஒவ்வொரு ஆண்டும் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தும் திறமையை, 2500 பேருக்குக் கண்தானம் ஏற்படுத்தும் தூதுவை, இலட்சக்கணக்கில் நாட்டுமரங்களை நடும் உயிர்தாயை, இவரை அறிந்த மனிதம் மரியாதை செய்யாமல் இருக்க முடியாது.

இவர் கலைஞரே! ஒரு பரதநாட்டிய மேடையில் நடனமாடும் போது, அவர் கைகளும் கண்களும் கூட பேசும். தமிழின் அழகு, பாரம்பரியம், ஆன்மிகம், ஆனந்தம் அனைத்தையும் நுணுக்கமாக நடனமாக்கும் புனித பாவைகளின் நடனம் அவர் நடனம்.

மேலும், 10 மொழிகளில் 100 நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டு கின்னஸ் சாதனை புரியவிருக்கும் முயற்சியில், இலக்கிய உலகமே அவரது செயலால் நெகிழ்ந்துள்ளது. இது வெறும் சாதனை அல்ல – இது மனித நேயத்தின் சாதனை.
இவ்வளவு பெருமைகளை தாங்கும் இவர், இன்று உலகமே பாராட்டும் ஒரே தமிழ்ப் பெண். அவர் எழுத்து, அவர் நடை, அவர் பார்வை, அவர் வாழ்வு – அனைத்துமே ஒரு பாடமாக, பேச்சாக, தூண்டுதலாக, தெய்வீக வாசலில் பயணமாக அமைகின்றன.

அழகிலும், அறிவிலும், அருள் நிரம்பிய அருமைபெண் டாக்டர் ஷீபா லூர்தஸ் – தமிழின் கன்னி நகைச்சுவை, உலகத்தின் ஒளிவிழி!

Top