தமிழர் திருநாளை முன்னிட்டு திமுக தென்சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் மத்திய பகுதி சார்பாக மாவட்ட கழக செயலாளர் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்த்துகள் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனைப்படி சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய பகுதி செயலாளர் எஸ் அரவிந்த் ரமேஷ் தலைமையில் பள்ளிக்கரணை 189 வார்டு மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளர் வ. பாபு ஏற்பாட்டில் இளைஞர் மட்டைப்பந்து போட்டி நடைெற்றது.


இதில் அப்பகுதிக்கு உட்பட்ட 14 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இரண்டு அணி வீரர்களுக்கு கோப்பை மற்றும் ஊக்கத்தொகை கொடுத்து வட்ட கழக செயலாளர் பாபு அவர்கள் அனைவரும் கௌரவித்தனர். இதில் வட்டத்துக்குள்ள அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.