பஸ் ஸ்டாப் அமைக்கும் பணிக்காக கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பள்ளம் தோண்டியபோது ஏஜி&பி பிரதம் எரிவாயு குழாயில் சேதம்:உடனடியாக சீரமைக்கப்பட்டு கியாஸ் வினியோகம்
செங்கல்பட்டு, ஜூலை 10- ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) வழங்குவதற்காக இந்நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பாதைகளில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பஸ் ஸ்டாப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் அவற்றை அலட்சிப்படுத்திவிட்டு. எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு அதில் இருந்து கியாஸ் வெளியேறியது….
