Ajinomoto logo

அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்

சென்னை: அஜி-னோ-மோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா-கட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Read More
Thyroid Eye Disease

கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு  அதிகரித்துள்ளது!

சென்னை: “பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த TED பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்,” என்கிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண்…

Read More
Dr. Vishnu Prabhu appointed as Papua New Guinea's Trade Commissioner for India

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது

Read More
திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி  தூய  வளனார்  கல்லூரியில்  மாற்றுத்திறனாளிகள்  அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம்  கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.  தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4  உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார்.

Read More
I.PERIASAMY BIRHDAY NEWS PHOTO...

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கினார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு  உட்பட்ட  26-வது   வார்டு மக்கான்தெரு பகுதியில் மாநகராட்சி  சுகாதார பிரிவு 3 மற்றும் 6 ஆகிய  பகுதிகளில்  உள்ள  50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  26-வது  வார்டு  திமுக  மூத்த  நிர்வாகி    எஸ். சாகுல்ஹமீது, 26-வது   வார்டு  திமுக  செயலாளர் எம்.சுப்பிரமணி , 38-வது  வார்டு  திமுக செயலாளர்  ஒய்.உஸ்மான்,  நகர மாணவரணி  துணை  அமைப்பாளர் மு.தாஜ்தீன்,  …

Read More
திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

பஞ்சாப்பில் பல்வேறு நிகழ்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும்போது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் தலைமையில் திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக வினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்

Read More
உலகத்திருக்குறள் மாநாடு 2022

உலகத்திருக்குறள் மாநாடு 2022

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து மாநாட்டு மலரின் முதல் பிரதியை வெளியிட கல்லூரி அறங்காவலர் மலர்விழி பெற்றுக்கொண்டார் அருகில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா மற்றும் குறள் மலை சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Read More