சென்னை தெற்கு மாவட்டம் மேடவாக்கத்தில் திமுக சார்பில் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தலைமை பொதுக்குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலரும், புனித தோமையார் மலை ஒன்றிய கழக செயலாளரும், மேடவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மேடவாக்கம் ப. ரவி தலைமையில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைச்சருமான மா.சுப்பிரமணியன், கவிஞர் ஈரோடு இறைவன், முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ.ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.